அண்மையில், சீனாவின் லியூ சோ நகரைச் சேர்ந்த சியா தாவ் கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள சிறப்பான தாமரை மலர்கள் அறுவடை செய்யப்பட்டன.
இதனால் உள்ளூர் கிராமவாசிகள் தாமரை மலர்களைப் பறிப்பதிலும் பதனீடு செய்வதிலும் சுறுசுறுப்பாக உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக, பொருளாதாரப் பயனை உயர்த்தும் வகையில், இப்பிரதேசத்திலுள்ள நீர் வயல்கள் சரிப்படுத்தப்பட்டுள்ளன.
அங்குள்ள தாமரை மலர்களைக் கொண்டு தேயிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. உள்ளூர் விவசாயிகள் இத்தொழிலின் மூலம் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்