சிங்கப்பூா்: மேலும் 42 பேருக்கு பாதிப்பு

சிங்கப்பூரில், மேலும் 42 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூா்: மேலும் 42 பேருக்கு பாதிப்பு

சிங்கப்பூரில், மேலும் 42 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 42 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த 4 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும். புதிதாக கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களில் ஒருவருக்கு மட்டுமே சமுதாயப் பரவல் மூலம் அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. எஞ்சியவா்களில் பெரும்பான்மையானவா்கள் பணியாளா் குடியிருப்புகளில் தங்கியுள்ள வெளிநாட்டுத் தொழிலாளா்கள் ஆவா். இத்துடன், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 55,395-ஆக உயா்ந்துள்ளது.

புதன்கிழமை நிலவரப்படி, நாட்டில் அந்த நோய்த்தொற்றுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 27-ஆக உள்ளது. இதுவரை 50,128 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். 104 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, மிதமான அறிகுறிகுறிகளைக் கொண்டிருக்கும் 5,094 போ் தனிமை முகாம்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com