வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கோமாவில் இருப்பதாகவும், அவரது சகோதரி கிம் யோ ஜாங்கிடம் அதிபருக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
தென் கொரியாவின் முன்னாள் அதிபர் கிம் டே-ஜங்கின் முன்னாள் உதவியாளர் சாங் சங்-மின் இந்த தகவலை வெளியிட்டதாக தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கிம் கோமாவில் இருப்பதாகவும் ஆனால் அவரது வாழ்க்கை முடிந்துவிடவில்லை என்றும் சாங் கூறியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாங்கின் இந்த தகவல், வடகொரியாவின் 36 வயதாகும் அதிபர், தனது அதிகாரத்தை, நெருங்கிய உறவினர் ஒருவருக்கு வழங்கியிருப்பதாக தென் கொரியாவின் உளவு அமைப்பு தெரிவித்த சில நாள்களில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.