ஆகஸ்ட் திங்கள் 27ஆம் நாள், ஹெபெய் மாநிலத்தின் ஷிஜியாச்சுவாங் மாநகரில் அமைந்துள்ள கௌவ்செங் நகரின் உள்ள போக்குவரத்துக் காவற்துறையினர்கள், அங்குள்ள பள்ளி வாகனங்களைச் சோதனை செய்துள்ளனர்.
இச்சோதனையின் போது டயர்களின் தரம், வாகனங்களின் பாதுகாப்பு செயற்திறன், தீயணைப்பு கருவிகள் முதலியவற்றை சரிபார்க்கும் பணியை மேற்கொண்டனர். புதிய பருவ கால வகுப்புகள் தொடங்கவுள்ளதையொட்டி மாணவர்கள் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பாகப் பயணிப்பதை உத்தரவாதம் செய்யும் வகையில் இத்தகு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தகவல்: சீன ஊடக குழுமம்