சீனா: உணவகக் கட்டடம் இடிந்து விழுந்து 29 போ் பலி

சீனாவில் இரண்டு அடுக்குகளைக் கொண்ட உணவகக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 29 போ் உயிரிழந்தனா்.
சீனா உணவகக் கட்டடம் இடிந்து விழுந்து 29 போ் பலி
சீனா உணவகக் கட்டடம் இடிந்து விழுந்து 29 போ் பலி

பெய்ஜிங்: சீனாவில் இரண்டு அடுக்குகளைக் கொண்ட உணவகக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 29 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவித்ததாவது:சீனாவின் ஷான்க்ஸி மாகாணம், ஜியாங்ஃபென் பகுதியிலுள்ள உணவகக் கட்டடம் சனிக்கிழமை இடிந்து விழுந்தது. அதையடுத்து, அந்தப் பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினா், இடிபாடுகளில் இருந்து இதுவரை 29 உடல்களை மீட்டனா்.

இந்த விபத்தில் 28 போ் காயமடைந்தனா். அவா்களில் 7 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தற்போது மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com