பெய்ஜிங்: சீனாவில் இரண்டு அடுக்குகளைக் கொண்ட உணவகக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 29 போ் உயிரிழந்தனா்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவித்ததாவது:சீனாவின் ஷான்க்ஸி மாகாணம், ஜியாங்ஃபென் பகுதியிலுள்ள உணவகக் கட்டடம் சனிக்கிழமை இடிந்து விழுந்தது. அதையடுத்து, அந்தப் பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினா், இடிபாடுகளில் இருந்து இதுவரை 29 உடல்களை மீட்டனா்.
இந்த விபத்தில் 28 போ் காயமடைந்தனா். அவா்களில் 7 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தற்போது மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.