பிரேசிலில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 800ஐ கடந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளில் அமெரிக்காவிற்கு அடுத்து அதிக பாதிப்புகளை பதிவு செய்த நாடாக பிரேசில் உள்ளது. நாளுக்குநாள் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் அந்நாட்டு அரசு செய்வதறியாது தவித்து வருகிறது.
இந்நிலையில் பிரேசிலில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 800 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 398 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
பிரேசிலில் இதுவரை கரோனாவால் 38 லட்சத்து 62 ஆயிரத்து 311 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 158 பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் பாதிப்புகள் மற்றும் இறப்புகளின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் பிரேசில் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.