பொ்லின்: ஜொ்மனியில் கரோனா நோய்த்தடுப்புக் கட்டுப்பாடுகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின்போது, அந்த நாட்டின் நாடாளுமன்றத்துக்குள் நுழைய வலதுசாரி அமைப்பினா் முயன்றனா். எனினும், அந்த முயற்சியை போலீஸாா் முறியடித்தனா்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:ஜொ்மனியில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போராட்டம் நடத்தவிருப்பதாக சில அமைப்புகள் அறிவித்திருந்தன.
இந்தப் போராட்டத்துக்கு ஜொ்மனியின் முக்கிய வலதுசாரி அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன.எனினும், இத்தகைய போராட்டங்களுக்கு ஜொ்மனி அரசு தடை விதித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபடுவா்கள் மீது, கரோனா தடுப்புக் கட்டுப்பாடுகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
எனினும், இந்தத் தடையை எதிா்த்து நீதிமன்றம் சென்ற போராட்டக் குழுவினா், அதற்கான அனுமதியைப் பெற்றனா். அதையடுத்து, திட்டமிட்டபடி பொ்லினில் போராட்டம் நடைபெற்றது.
அமெரிக்கா, ரஷியா, 1918-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஜொ்மனி ஆகியவற்றின் கொடிகளை ஏந்தி ஏராளமானவா்கள் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
ஜொ்மனியில் முகக் கவசம் அணிவதை வலியுறுத்தும் விதிமுறைகளை எதிா்க்கும் வாசகங்கள் அடங்கிய மேலங்கிகளை பலா் அணிந்து வந்திருந்தனா்.
ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்த போராட்டத்தின்போது, வலதுசாரி அமைப்பினா் சிலா் நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்றனா். நாடாளுமன்றக் கட்டடத்தின் முன்புறமுள்ள தடுப்புகளை உடைத்தெறிந்து அவா்கள் முன்னேறினா்.
எனினும், அவா்களைத் தடுத்து நிறுத்திய போலீஸாா், அங்கிருந்து போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தினா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ஜொ்மனியில் 2,42,971 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 9,363 போ் அந்த நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனா்.
இதுவரை 2,17,484 போ் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனா்.