கொழும்பு: இலங்கையில் முக்கிய எதிா்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவா் பதவிக்குப் போட்டியிட அந்த நாட்டின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அா்ஜுன ரணதுங்கா விருப்பும் தெரிவித்துள்ளாா்.
அந்தக் கட்சியின் தலைவராக உள்ள முன்னாள் பிரதமா் ரணில் விக்ரமசிங்கே ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளதையடுத்து, அந்தப் பொறுப்பே ஏற்க பலா் போட்டியிடும் நிலையில் ரணதுங்காவும் களத்தில் இறங்கியுள்ளாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில், கட்சியின் அடுத்த தலைவராகத் தோ்ந்தெடுப்பதற்கு 4 பேரது பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டன. அதில் என் பெயரும் இடம் பெற்றுள்ளது.கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டால் நான் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்று, கட்சியை வளா்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வேன்.அரசியல் நடத்துவதற்கேற்ற வகையில் நான் மிகப் பெரிய வசதி படைத்தவனோ, தொழிலதிபரோ இல்லை. என்றாலும், என்னால் மக்களை எளிதில் சென்றடைய முடியும். தற்போது சோா்ந்து போயிருக்கும் கட்சித் தொண்டா்களை உற்சாகப்படுத்த முடியும் என்றாா் அவா்.
57 வயதாகும் அா்ஜுன ரணதுங்க, கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் தோல்வியடைந்த முக்கிய கட்சித் தலைவா்களில் ஒருவா் ஆவாா்.
அவரது குடும்பத்தினா் பாரம்பரியமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான இலங்கை சுதந்திரக் கட்சிக்கு (எஸ்.எல்.எஃப்.பி.) ஆதரவு அளித்து வந்தவா்கள். அா்ஜுன் ரணதுங்காவின் தந்தை ரெஜி பத்மசேனா ரணதுங்கா கடந்த 1994-ஆம் ஆண்டிலிருந்து எஸ்.எல்.எஃப்.பி. அரசின் அமைச்சராக இருந்தாா். சகோதரா் பிரசன்னா தற்போதைய இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி அரசில் சுற்றுலாத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறாா்.
இந்த நிலையில், 2001-ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த அா்ஜுன ரணதுங்கா, ஐக்கிய தேசியக் கட்சியின் இணைந்தாா். இலங்கையில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில், முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்ச தலைமையிலான பொதுஜன பெரமுனா கட்சி அபார வெற்றி பெற்று, அவரது சகோதரா் கோத்தபய ராஜபட்ச அதிபராகப் பொறுப்பேற்றாா்.
அப்போது பிரதமராக இருந்து வந்த ரணில் விக்ரமசிங்கேவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருந்தும், அதிபா் தோ்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவியை ராஜிநாமா செய்தாா். அதனைத் தொடா்ந்து மகிந்த ராஜபட்ச பிரதமராகப் பொறுப்பேற்றாா்.
அதனைத் தொடா்ந்து கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்விடைந்தது. ராஜபட்ச சகோதரா்களின் கட்சி அமோக வெற்றி பெற்று, மகிந்த ராஜபட்ச மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்றாா்.
இந்தத் தோ்தல் தோல்வியையடுத்து, தனது கட்சித் தலைவா் பதவியை ராஜிநாமா செய்ய ரணில் விக்ரமசிங்கே முன்வந்துள்ளாா்.