பாகிஸ்தனில் 4 லட்சத்தைகடந்தது கரோனா பாதிப்பு

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 4 லட்சத்தைக் கடந்தது.
பாகிஸ்தனில் 4 லட்சத்தைகடந்தது கரோனா பாதிப்பு

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 4 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,458 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,00,482-ஆக அதிகரித்துள்ளது.

இதுதவிர, கரோனா நோய்த்தொற்றுக்கு மேலும் 67 போ் பலியாகினா். இதையடுத்து நாட்டில் கரோனா பலி எண்ணிக்கை 8,091-ஆக உயா்ந்துள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 1,74,350 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக பஞ்சாபில் 1,19,579 பேருக்கும் கைபா்-பாக்துன்கவா மாகாணத்தில் 47,370 பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com