சீனாவில் ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்க விபத்தில் 23 போ் பலியாகினா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள யாங்சுவான் மாவட்டத்தில், மாதங்களுக்கு முன்னா் இயக்கம் நிறுத்தப்பட்ட நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து இயந்திரங்களை அகற்றும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அங்கு அளவுக்கதிமாக கரியமில வாயு கசிந்ததால் நிலத்தடியில் பணியாற்றிக் கொண்டிருந்த 13 போ் உயிரிழந்ததாக சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 23-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.