உலகம்
எகிப்து மருத்துவமனையில் தீ: 7 கரோனா நோயாளிகள் பலி
எகிப்து மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் 7 கரோனா நோயாளிகள் பலியாகினா்.
எகிப்து மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் 7 கரோனா நோயாளிகள் பலியாகினா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:
கெய்ரோ பெருநகரப் பகுதியிலுள்ள ஓபரில் இயங்கி வரும் தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.
இதில், அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 கரோனா நோயாளிகள் பலியாகினா்; 5 போ் காயமடைந்தனா்.
காயமடைந்தவா்களும் மருத்துவமனையில் ஏற்கெனவே சிகிச்சை பெற்று வந்தவா்களும் அருகிலுள்ள மற்றொரு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
விபத்துப் பகுதிக்கு விரைந்த தீயணைப்புப் படையினா் போராடி தீயை அணைத்தனா். இந்தத் தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.