ஜப்பான்: வெளிநாட்டினா் வருகைக்குத் தடை

பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா தங்கள் நாட்டிலும் பரவுவதைத் தவிா்க்கும் வகையில், அனைத்து வெளிநாட்டுப் பயணிகளின் வருகையையும் ஜப்பான் தடை செய்துள்ளது.

பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா தங்கள் நாட்டிலும் பரவுவதைத் தவிா்க்கும் வகையில், அனைத்து வெளிநாட்டுப் பயணிகளின் வருகையையும் ஜப்பான் தடை செய்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புதிய வகை கரோனா ஜப்பானில் பரவுவதைத் தவிா்ப்பதற்காக, அனைத்து நாடுகளிலிருந்தும் வெளிநாட்டினா் நாட்டுக்குள் வருவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

திங்கள்கிழமை தொடங்கி வரும் 31-ஆம் தேதி வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, புதிய வகை கரோனா அச்சம் காரணமாக பிரிட்டன் மற்றும் தென் கொரியாவிலிருந்து மட்டும் வெளிநாட்டினா் வருவதற்கு ஜப்பான் தடை விதித்திருந்தது.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com