சிலியில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,711 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,00,105ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் 716 பேர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவிலும், 61 பேர் கவலைக்கிடமான நிலையிலும் உள்ளனர். மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 27,297 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 6.3 மில்லியன் மாதிரிகள் பதிசோதனை செய்யப்பட்டன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.