துருக்கியில் ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து அந்த நாட்டு பேரிடா் மேலாண்மை இயக்குநரகம் தெரிவித்துள்ளதாவது:
இலாஸிக் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.37 மணிக்கு (உள்ளூா் நேரம்) நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 5.3 அலகுகளாகப் பதிவானது என்று இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் அண்டை மாகாணங்களிலும் உணரப்பட்டன. எனினும், நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை என்று உள்துறை அமைச்சா் சுலைமான் சோய்லு தெரிவித்தாா்.