உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 8.16 கோடியாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாக்கிழமை நிலவரப்படி 8,16,73,086 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 17,81,539 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 5,77,99,127 பேர் பூரண குணமடைந்துள்ளனா். சுமாா் 2,20,92,420 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,05,804 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகில் கரோனா தொற்றுக்கு மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை 1,97,81,624 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,43,182 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்த்துள்ளனர். 1,16,96,727 பேர் குணமடைந்துள்ளனர், 7,74,1,715 பேர் தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 28,912 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்தியா 1,02,24,797 தொற்று பாதிப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 1,48,190 ஆக உள்ளது. இதுவரை 9,80,7,569 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தவர்களின் நாடுகளின் பட்டியலில் பிரேசில் தற்போது 1,91,641 உயிரிழப்புகளுன் இரண்டாவது இடத்தில் உள்ளது.