ஜப்பானிலுள்ள புக்குஷிமாவில் இன்று (சனிக்கிழமை) போலீஸ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் பலர் காயமடைந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் வயலில் கண்டெடுக்கப்பட்டதாக என்.எச்.கே தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக ஜப்பானிய தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.
ஹெலிகாப்டரில் ஏழு பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
விபத்து எப்படி நேர்ந்தது என்ற காரணம் தெரியவில்லை.