அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர், 2 பேர் காயமடைந்தனர்.
ஃபுளோரிடாவின் ரிவியரா கடற்கரையில் சனிக்கிழமை நடந்த இறுதிச்சடங்கைத் தொடர்ந்து தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர், மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர்.
விக்டரி நகரில் அமைந்துள்ள தேவாலயத்தில் பிற்பகல் 2:30 மணியளவில் மர்ம நபர் திடீரென தனது துப்பாக்கியால் 13 முறை சுட்டார். இதில் ஒரு ஆண் மற்றும் 15 வயது சிறுவன் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு சிறுமி உள்ளிட்ட இருவர் காயமடைந்தனர்.
காயமடைந்த இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை, தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.