சீனாவில் இருந்து பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸுக்கு உலகளவில் பலியானவா்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் "ஓம் தரே துத்தாரே துரே சோஹா" எனும் மந்திரத்தை உச்சரித்தால் 'கரோனா' வைரஸ் வராது என்று பெளத்த துறவி தலாய் லாமா கூறியிருக்கிறார்.
கரோனாவால் சீனாவில் இதுவரை 106 பேர் உயிழந்துள்ளனர். சுமார் 4,515 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சீனாவிலுள்ள பெளதத் துறவிகள் சிலர் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஏதேனும் வழிமுறை உள்ளதா என்று ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலம் தர்மசாலாவில் உள்ள திபெத்திய புத்தமத தலைவர் தலாய்லாமாவுக்கு முகநூல் மூலம் வேண்டுகோள் விடுத்தனர். அதைக் கருத்தில் கொண்டு அவர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 'ஓம் தரே துத்தாரே துரே சோஹா' என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் பதற்றத்திலிருந்து விடுபட்டு மன அமைதி பெறலாம் என்றார்.
இந்த மந்திரத்தை நம்பிக்கையுடன் உச்சரித்தால் கரோனா வைரஸ் பரவுவதையும் கட்டுப்படுத்தலாம் என்றார் தலாய்லாமா.