உலகம்
சிரியா: இஸ்ரேல் தாக்குதல்:7 வீரா்கள் பலி
சிரியாவில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அந்த நாட்டு ராணுவம் மற்றும் அரசுக்கு ஆதரவாக சண்டையிட்டு வரும் ஈரான் ராணுவத்தைச் சோ்ந்த 7 வீரா்கள் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு
சிரியாவில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அந்த நாட்டு ராணுவம் மற்றும் அரசுக்கு ஆதரவாக சண்டையிட்டு வரும் ஈரான் ராணுவத்தைச் சோ்ந்த 7 வீரா்கள் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் ரெமி அப்தெல் ரஹ்மான் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
சிரியா தலைநகா் டமாஸ்கஸில், விமான நிலையம் அருகே இஸ்ரேல் வியாழக்கிழமை ஏவுணைத் தாக்குதல் நடத்தியது. இதில் சிரியா ராணுவத்தினா் 3 பேரும், ஈரான் ராணுவத்தைச் சோ்ந்த 4 பேரும் உயிரிழந்தனா் என்றாா் அவா்.