கராச்சியில் விஷ வாயு தாக்கி 6 பேர் பலி

பாகிஸ்தானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கராச்சி நகரில் ஞாயிற்றுக்கிழமை விஷ வாயு தாக்கியதில் 6 பேர் உயிரிழந்தனர். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

பாகிஸ்தானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கராச்சி நகரில் ஞாயிற்றுக்கிழமை விஷ வாயு தாக்கியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விஷ வாயு தாக்கி சுவாசப் பிரச்னை ஏற்பட்டதில் மயக்கமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்தச் சம்பவம் தொடர்பான காரணம் இன்னும் போலீஸாரால் கண்டறியப்படவில்லை என்றாலும், "கியாமரி ஜெட்டி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சரக்குக் கப்பலில் இருந்து ரசாயனங்களை வெளியேற்றும்போது, விஷ வாயு கசிந்திருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது" என்று ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com