ஆஸ்திரேலியாவின் மங்களூரு நகரில் இரண்டு சிறிய விமானங்கள் மேற்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு அருகே மங்களூரு நகர் பகுதியில் நடுவானில் இரண்டு சிறிய ரக விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக விக்டோரியா மாநில போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இரண்டு விமானங்களும் நடுப்பகுதியில் மோதியுள்ளன. ஒவ்வொரு விமானத்திலும் இரண்டு பேர் பயணித்துள்ளனர். எனவே இரண்டு விமானங்களில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். நால்வருமே இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விபத்து குறித்து விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.