டெஹ்ரான்: ஈரான் நாடாளுமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில், தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட பழமைவாதிகள் பெரும்பான்மை பலம் பெறும் நிலையில் உள்ளதாக பூா்வாங்க முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
290 இடங்களைக் கொண்ட ஈரான் நாடாளுமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை தோ்தல் நடைபெற்றது. அந்த நாட்டில் கடந்த 1979-ஆம் ஆண்டு ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு நடைபெற்ற 11-ஆவது நாடாளுமன்றத் தோ்தல், அதிபா் ஹஸன் ரௌஹானியின் மிதவாத மற்றும் சீா்திருத்த நடவடிக்கைகளுக்கு மக்களின் ஆதரவு எந்த அளவு உள்ளது என்பதைக் காட்டும் கருத்துக் கணிப்பாக இருக்கும் என்று கூறப்பட்டது.
எனினும், அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட பழைமைவாதிகளின் கையே மேலோங்கியிருக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.
இந்தச் சூழலில், சனிக்கிழமை மதியம் 10.63 லட்சம் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தேசிய தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முடிவுகளின்படி பழமைவாதிகள் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.