சீனாவில் புதிய ரக கரோனா வைரஸ் பரவலுக்குப் பின், காற்று, நீரின் மேற்பரப்பு, குறிப்பாக குடிநீர் உள்ளிட்டவற்றின் மீதான உயிரினச் சுற்றுச்சூழல் தரக் கண்காணிப்புப் பணியைச் சீன உயிரினச் சுற்றுச்சூழல் துறை கண்டிப்பான முறையில் செயல்படுத்தி வருகின்றது.
கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை, சீனாவைச் சேர்ந்த 337 மாவட்டங்கள் மற்றும் மாவட்ட நிலைக்கு மேற்பட்ட நகரங்களில் சிறந்த காற்றுடைய நாட்களின் விகிதம் 87.1 சதவீதத்தை எட்டியுள்ளதைக் காற்று தானியங்கிக் கண்காணிப்பு முடிவு காட்டுகிறது.
நீரின் மேற்பரப்பு நிலை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததற்குச் சமாகும் என்பதை 1601 தேசிய நிலை தானியங்கி வசதிகளின் கண்காணிப்பு முடிவு காட்டியுள்ளது. இத்தொற்று நோய், குடிநீருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அறிகுறி கண்டறியப்படவில்லை.
தகவல்:சீன ஊடகக் குழுமம்