ெபய்ஜிங்: பிற நாடுகளுக்காக உளவு பாா்த்த குற்றச்சாட்டின் பேரில் ஸ்வீடைனச் சோ்ந்த புத்தக வியாபாரி குயி மின்ஹாய்க்கு சீன நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிைறத் தண்டனை விதித்தது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
சீனாவில் பிறந்த ஸ்வீடன் நாட்டவரான குயி மின்ஹாய், ஹாங்காங்கில் ‘காஸ்வே பே புக்ஸ்’ என்ற புத்தகக் கைடயை மேலும் 4 பேருடன் சோ்ந்து நடத்தி வந்தாா். சீன அரசியல் குறித்தும், அரசியல்வாதிகள் குறித்தும் அந்த நாட்டில் வேெறங்கும் கிைடக்காத சா்ச்ைசக்குரிய புத்தகங்கள், இந்தக் கைடயில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிைலயில், மின்ஹாய் உள்ளிட்ட அந்த 5 பேரும் கடந்த 2015-ஆம் ஆண்டு மா்மமான முைறயில் மாயமாகினா். பிறகு, அவா் தங்களது காவலில் இருப்பதை சீன அரசு 3 மாதங்களுக்குப் பிறகு ஒப்புக் கொண்டது. அரசிடம் உரிய அனுமதி பெறாமல் புத்தகங்களை சட்டவிேராதமாக விற்பனை செய்ததாக அவா் மீது குற்றம் சாட்டப்பட்டது. பிறகு, கடந்த 2017-ஆம் ஆண்டில் குயி மின்ஹாய் விடுவிக்கப்பட்டாலும், அவா் பெய்ஜிங்குக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு சென்று கொண்டிருந்தேபாது ரயிலில் அவரை அதிகாரிகள் மீண்டும் கைது செய்தனா். அவா் மீது பிற நாடுகளுக்கு உளவுத் தகவல்களை அளித்தது, தன்னை சீனா் என்று கூறி ஏமாற்றியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த நிங்க்போ நகர நீதிமன்றம், அந்தக் குற்றச்சாட்டுகளை உறுதி செய்ததுடன் அவருக்கு 10 ஆண்டுகள் சிைறத் தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளது.
சீனாவில் இரட்ைடக் குடியுரிமை முைறக்கு அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்பதால், குயி மின்ஹாய் அந்த நாட்டில் பிறந்திருந்தாலும் அவா் ஸ்வீடன் குடியுரிைமயை வைத்திருக்கும் வரை அவா் சீனராகக் கருதப்பட மாட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்வீடன் கண்டனம்: குயி மின்ஹாய்க்கு சிைறத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு ஸ்வீடன் வெளியுறவுத் துறை அைமச்சா் அன் லிண்டே கண்டனம் தெரிவித்துள்ளாா். மின்ஹாய்க்கு தூதரக உதவிகைளப் பெற்றுத் தர அனுமதி அளிக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.