அமெரிக்காவில் மதுபான விடுதியில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.
அமெரிகாவின் விஸ்கொன்சின் மாகாணம் மில்வாக்கி நகரில் உள்ள மதுபான விடுதியில் நேற்று நுழைந்த மர்மநபர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகினர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
அத்துடன், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே விஸ்கொன்சின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.