உலக அளவில் கரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நிலைமையில் சில ஆக்கப்பூர்வ முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த வைரஸைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை இவை காட்டுகின்றன. இருப்பினும், பல்வேறு நாடுகள் தடுப்புப் பணியை வலுப்படுத்தி, வைரஸ் அதிக அளவில் பரவுவதைத் தவிர்க்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் பொதுச் செயலாளர் தெட்டராஸ் 26ஆம் தேதி (நேற்று) ஜெனீவாவில் நடைபெற்ற கொவைட்-19 நோய் நிலைமை பற்றிய கூட்டத்தில் கூறினார்.
ஜனவரி 23 முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை, சீனாவின் கொவைட்-19 நோய் நிலைமை உச்ச நிலையை எட்டிய பின் அதன் தாக்கம் குறைந்துள்ளது. வைரஸ் மாற்றத்தில் தெளிவான அறிகுறி இல்லை. சீனாவின் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக, நோயாளிகள் அதிகரிப்பு தவிர்க்கப்பட்டது என்று சீனாவில் ஆய்வு பயணம் மேற்கொண்ட நிபுணர்கள் குழுவின் சில கருத்துக்களை இக்கூட்டத்தில் அவர் மீண்டும் தெரிவித்தார்.