பாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதல்: 30 பேர் பலி

பாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 30 பேர் பலியாகினர். 
பாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதல்: 30 பேர் பலி

பாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 30 பேர் பலியாகினர். 

பாகிஸ்தானின் ராவல் பிண்டியில் இருந்து கராச்சி நோக்கி பயணிகள் ரயில் ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. இந்த ரயில் சிந்த் மாகாணத்தின் ரோஹிரி ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தபோது பேருந்து மீது மோதியது. 

இந்த கோர விபத்தில் பேருந்து மூன்று துண்டாக உடைந்தன. இதில் 30 பேர் பலியாகினர். 60 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சுக்கூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com