பயங்கரவாத நடவடிக்கை காரணமாக பாகிஸ்தான் வான்வெளியில் விமானங்களை இயக்குவதில் ஆபத்து இருப்பதாக அமெரிக்க விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுத்துறை (எஃப்.ஏ.ஏ) வியாழக்கிழமை எச்சரித்தது.
இது அமெரிக்காவை மையமாக வைத்து இயக்கப்படும் அனைத்து விமான சேவைகள் மற்றும் விமானிகளுக்கு பொருந்தும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் விமான நிலையங்கள் மற்றும் விமானங்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடர்ந்து, குறிப்பாக தரையில் உள்ள விமானங்களுக்கும், குறைந்த உயரத்தில் இயங்கும் விமானங்களுக்கும், விமானங்களின் வருகை மற்றும் புறப்படும் கட்டங்கள் உட்பட, அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறைக்கு தொடர்ந்து ஆபத்து இருப்பதாக என்.ஓ.டி.ஏ.எம் தெரிவித்துள்ளது.