சீனாவில் வசந்த விழா சிறப்புப் போக்குவரத்து தொடக்கம்

2020ஆம் ஆண்டின் வசந்த விழாச் சிறப்புப் போக்குவரத்து, 10ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
சீனாவில் வசந்த விழா சிறப்புப் போக்குவரத்து தொடக்கம்

2020ஆம் ஆண்டின் வசந்த விழாச் சிறப்புப் போக்குவரத்து, 10ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. எதிர்வரும் 40 நாட்களில் சுமார் 300 கோடி மக்கள் பயணிப்பர் என்று மதிப்பிடப்படுகிறது.

முழு உலகத்திலும் வசந்த விழாச் சிறப்புப் போக்குவரத்தில் தான், குறிப்பிட்ட இடைவெளியில் மிக பெரிய அளவிலான மக்கள் இடம்பெயர்கின்றனர். இதன் மூலம், வசந்த விழாவின் போது ஒன்று கூடி மகிழும் சீன மக்களின் எதிர்பார்ப்பு வெளிக்காட்டப்படுகிறது. சீனப் போக்குவரத்து உத்தரவாதத் திறன் மற்றும் சமூக மேலாண்மை திறனுக்கான சோதனையாகவும் இது உள்ளது.

மின்னணுச் சீட்டுடன் பயணித்தல், முகம் வருடிப் பயணித்தல், மின்னணு சாலை சுங்க நிலையம், அறிதிறன் போக்குவரத்து வழிக்காட்டல் உள்ளிட்ட புதிய தொழில் நுட்பச் சேவைகளால், வசந்த விழாக்காலப் போக்குவரத்து நுண்மதி நுட்பமயமாக்கப்பட்டுள்ளன. 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com