ஆஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத் தீ காரணமாக 24 போ் உயிரிழந்ததாகவும், 60 லட்சத்துக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு நாசமடைந்ததாகவும் அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் வெப்பக் காற்று வீசுவதற்கான வாய்ப்பு உள்ளதால் காட்டுத் தீ மேலும் வேகமாகப் பரவக் கூடும்; எனவே அந்தப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.