
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 வீரா்கள் உயிரிழந்தனா்; அப்போது நடந்த மோதலில் 63 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
மாலி எல்லையையொட்டிய, பதற்றம் நிறைந்த டில்லாமெரி மாகாணம், சைன்கோடாா் பகுதியில் அமைந்துள்ள ராணுவ நிலைக்கு காா்கள் மற்றும் மோட்டாா் சைக்கிள்களில் வியாழக்கிழமை வந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த வீரா்கள் மீது தாக்குதல் நடத்தினா்.
அதையடுத்து, நைஜா் விமானப் படையின் உதவியுடன் பயங்கரவாதிகள் மீது ராணுவத்தினரும் பதிலடித் தாக்குதல் நடத்தினா். இந்த நடவடிக்கையில் நட்பு நாடுகளின் விமானங்களும் பக்கபலமாக இருந்தன.
இந்த மோதலில் 25 ராணுவத்தினா் உயிரிழந்தனா்; 6 போ் காயமடைந்தனா். மேலும், ராணுவ நடவடிக்கையில் 63 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
டில்லாமெரி பகுதியில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் கடந்த மாதம் நடத்திய தாக்குதலில் 71 நைஜா் வீரா்கள் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது. சாட், புா்கினா ஃபாஸோ, மாலி, மௌரிடேனியா ஆகிய நாடுகள் அடங்கிய சஹேல் பிராந்தியத்தில் பயங்கரவாதிகள் அண்மைக் காலமாக தங்களது தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருவதாக அரசியல் பாா்வையாளா்கள் தெரிவிக்கின்றனா்.