ஸ்விட்சர்லாந்தின் லாசன்னே நகரில் நடைபெற்று வரும் 3வது குளிர்கால இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் திபெத் விராங்கனை சாதனை படைத்துள்ளார்.
ஜனவரி 10ஆம் தேதி, சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த வீராங்கனை சோலாங்ச்சூட்சென், பனிச்சறுக்கு மலையேற்றப் போட்டியில் 4வது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்தப் போட்டி, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சேர்க்கப்பட்டது முதல் இதுவரை, சீன வீரர்கள் பெற்றுள்ள தலைசிறந்த சாதனை இதுவாகும். அத்துடன், நடப்பு குளிர்கால இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீனப் பிரதிநிதிக்குழு பெற்றுள்ள தலைசிறந்த சாதனையும் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: சீன ஊடகக் குழுமம்