சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 19ஆவது மத்திய கமிட்டியின் ஒழுங்கு பரிசோதனைக்கான ஆணையத்தின் 2020ஆம் ஆண்டு முழு அமர்வு ஜனவரி 13-ஆம் தேதி முற்பகல் பெய்ஜிங்கில் நடைபெற்றது. 2020ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஊழல் எதிர்ப்புப் பணி குறித்த திட்டம் இக்கூட்டத்தில் தீட்டப்பட்டது.
2020ஆம் ஆண்டில், குறிப்பிட்ட வசதியான சமூகம் சீனாவில் பன்முகங்களிலும் கட்டிமுடிக்கப்பட உள்ளது. அதோடு, 13வது ஐந்தாண்டுத் திட்டமும் இவ்வாண்டுக்குள் நிறைவடைகிறது.
கடந்த டிசம்பரில் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு கூட்டத்தில், 2020ஆம் ஆண்டு கட்சி மற்றும் நாட்டின் கண்காணிப்பை மேம்படுத்தும் பணியில் சீனா ஊன்றி நின்று, அதிகாரத்தின் மீதான கட்டுப்பாட்டையும் கண்காணிப்பையும் வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
தகவல்:சீன ஊடகக் குழுமம்