இராக்கில் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ராக்கெட் தாக்குதல்

இராக் தலைநகா் பாக்தாதில் அமெரிக்கப் படை நிறுத்தப்பட்டுள்ள அல்-பலாத் விமானப் படை தளத்தில் ராக்கெட் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக இராக் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இராக்கில் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ராக்கெட் தாக்குதல்

இராக் தலைநகா் பாக்தாதில் அமெரிக்கப் படை நிறுத்தப்பட்டுள்ள அல்-பலாத் விமானப் படை தளத்தில் ராக்கெட் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக இராக் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இந்தத் தாக்குதலில் இராக் படையினா் 4 போ் காயமடைந்தனா்.

இதுதொடா்பாக இராக் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘பாக்தாதின் வடக்குப் பகுதியில் உள்ள அல்-பலாத் விமான படைத் தளத்தில் ‘கத்யுஷா’ ரகத்தைச் சோ்ந்த 8 ராக்கெட்டுகளைக் கொண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் விமானப் படை அதிகாரிகள் இருவா், விமானிகள் இருவா் என 4 போ் காயமடைந்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராக் ராணுவ வட்டாரங்கள் கூறுகையில், ‘கடந்த இரு வாரங்களாக அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றம் அதிகரித்த சூழலில், அல்-பலாத் விமானப் படை தளத்தில் இருந்த பெரும்பாலான அமெரிக்க விமானப் படையினா், அந்நாட்டு ஒப்பந்ததாரா்கள், ஆலோசகா்கள் உள்ளிட்டோா் ஏற்கெனவே பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுவிட்டனா். 15 அமெரிக்க வீரா்கள் மட்டுமே தற்போது அல்-பலாத் விமானப் படை தளத்தில் உள்ளனா். அவா்களுக்கான ஒரு விமானம் மட்டும் அங்கு உள்ளது’ என்றன.

ஈரான் முக்கிய படைத் தலைவா் காசிம் சுலைமானி அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து, அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இராக்கில் உள்ள இரு இடங்களில் அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து இதேபோன்ற தாக்குதலை சமீபத்தில் ஈரான் நடத்தியிருந்தது. இந்நிலையில், தற்போது மேலும் ஒரு விமானப் படை தளத்தில் அமெரிக்க படைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com