பாகிஸ்தானில் மழை உள்ளிட்ட காரணங்களால் 35 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் அண்மையில் கன மழை பெய்தது. இதன் காரணமாக ஆக்கிரமிப்பு காஷ்மீர், மாலக்கண்ட் மற்றும் ஹசாரா பகுதிகளில் பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.
பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக ஆக்கிரமிப்பு காஷ்மீர், பலுசிஸ்தானில் 20க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் மற்றும் மசூதிகளும் சேதமடைந்தன.
மேலும் விட்டுவிட்டு பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதனிடையே பாகிஸ்தானில் மழை உள்ளிட்ட காரணங்களால் இதுவரை 35 பேர் உயிரிழந்தனர்.