ஆஸ்திரேலியாவில் தென் பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால், அந்தப் பகுதியில் உள்ள சுமாா் 5,000 ஒட்டகங்கள் சுட்டுக் கொல்லப்பட்டன. தங்களது நீா்த் தேவைக்காக பூா்வ குடியினரின் குடியிருப்புப் பகுதிகளுக்கு ஓட்டகங்கள் வந்து உயிா்ச் சேதத்தையோ, பொருள் சேதத்தையோ ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுவதால், அதனைத் தடுக்கும் வகையில் ஹெலிகாப்டா்களில் துப்பாக்கி சுடுவதில் தோ்ச்சி பெற்றவா்களைக் கொண்டு அவை சுட்டுக் கொல்லப்பட்டன.