ரஷியா நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருபவர் திமித்ரி மெத்வதேவ். இவர் கடந்த 2012ம் ஆண்டு முதல் பிரதமராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், ரஷிய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் தனது பதவியை இன்று ராஜிநாமா செய்தார். தனது ராஜிநாமா கடிதத்தை அதிபர் விளாடிமிர் புதினிடம் சமர்ப்பித்தார்.
மேலும் ராஜிநாமா கடிதத்தை பெற்றுக் கொண்ட புதின், மெத்வதேவ் சேவையை பாராட்டினார். மேலும், புதிய அமைச்சரவை அமைக்கும் வரை மெத்வதேவ் அமைச்சரவையை தொடர்ந்து செயல்பட வேண்டும் என அமைச்சர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
அதிபர் புதின், மெத்வதேவின் நோக்கங்களை, பிரதமரின் கேபினட் நிறைவேற்றத் தவறிவிட்டது என தெரிவித்ததாக ரஷிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.