அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு:  4 பேர் பலி

அமெரிக்காவில் மர்ம நபர் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். 
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு:  4 பேர் பலி

அமெரிக்காவில் மர்ம நபர் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். 

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள கிராண்ட்ஸ்வில்லே நகரத்தில் வீடு ஒன்றில் மர்மநபர் புகுந்து துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியுள்ளார். இந்த சம்பவத்தில் 4 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். 

தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு விரைந்த சென்ற போலீசார் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அத்துடன் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட சந்தேகத்துக்குரிய நபரையும் போலீசார் கைது செய்தனர். 

எனினும் இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த குடும்பத்தினர் பற்றிய தகவலை போலீசார் வெளியிடவில்லை. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com