பெருவில் இயற்கை எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.
பெருவின் தலைநகர் லிமாவில் நேற்று இயற்கை எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி, ஆட்டோ பழுதுபார்க்கும் கடையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தைதொடர்ந்து டேங்கர் லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் தீவிபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 50க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இச்சம்பவத்தில் 20 கட்டடங்களும் சேதமடைந்தன.