ஷாங்காய்: சீனாவில் கரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, லூனார் புத்தாண்டு விடுமுறையை சீன அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் பெரிய தொழில் நிறுவனங்களை மூடும்படியும், தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி செய்ய அனுமதிக்கும்படியும் வலியுறுத்தியுள்ளது.
சீனாவில் கரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,744 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் மட்டுமல்லாமல் பத்துக்கும் மேற்பட்ட உலக நாடுகளிலும் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் வுஹான் மாகாணத்துக்குச் சென்று வந்தவர்களில் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தாலும், இதுவரை உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை.