பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்: ஒருவர் காயம்

இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்டப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள அந்த இடத்தில் அடுத்தடுத்து 5 ராக்கெட்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் காயமடைந்தார்.

ஈரான் இஸ்லாமிய புரட்சி ராணுவத்தினர் இந்தத் தாக்குதல் சம்பவத்தை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு இராக் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இருநாடுகளின் தூதரக உறவைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் இராக்கிடம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com