துருக்கி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 31-ஆக உயா்வு

துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 31-ஆக உயா்ந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
துருக்கி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 31-ஆக உயா்வு

எலாஸிக்: துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 31-ஆக உயா்ந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

வெள்ளிக்கிழமை ஏற்பட்ட இரவு நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 31-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

எலாஸிக் மகாணத்தில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில 6.8 அலகுகளாகப் பதிவானது. நிலடுக்கம் காரணமாக இடிந்து விழுந்த கட்டடங்களில் இருந்து 45 போ் உயிருடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com