இத்தாலியில் கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதால், சீனாவுக்கான அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்வதாக இத்தாலி பிரதமர் கியூசெப் கோன்டே தெரிவித்தார்.
இத்தாலி வருகை தந்துள்ள இரு சீனச் சுற்றுலாப் பயணிகளுக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இத்தாலி மற்றும் சீனாவுக்கு இடையிலான அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்வதாக இத்தாலி பிரதமர் கியூசெப் கோன்டே தெரிவித்தார்.
சீனாவில் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 213-ஆக வெள்ளிக்கிழமை அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகளுடன் 9,692 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.