பாகிஸ்தான் விமானங்கள் தங்கள் நிலப்பரப்பில் பறக்கத் தடை விதித்தது ஐரோப்பிய ஒன்றியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, பாகிஸ்தான் விமானங்கள் தங்கள் நிலப்பரப்பில் பறக்க தடை விதித்து ஐரோப்பிய ஒன்றும் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் விமானங்களுக்குப தடை விதித்தது ஐரோப்பிய ஒன்றியம்
பாகிஸ்தான் விமானங்களுக்குப தடை விதித்தது ஐரோப்பிய ஒன்றியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, பாகிஸ்தான் விமானங்கள் தங்கள் நிலப்பரப்பில் பறக்க தடை விதித்து ஐரோப்பிய ஒன்றும் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் 250க்கும் மேற்பட்ட விமானிகள், விமானிகளுக்கான தேர்வில் மோசடி செய்து தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், மோசடியில் ஈடுபட்டு தேர்ச்சி பெற்ற பல விமானிகளுக்கு விமானங்களை இயக்குவதற்கான உரிமத்தை அந்த நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகமும் வழங்கியுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் சர்வதேச விமானங்களை இயக்கி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனால், ஏற்கனவே, பாகிஸ்தான் விமானிகளுக்கு வியத்நாம் தடை விதித்திருந்த நிலையில், பாகிஸ்தான் விமானங்கள் தங்கள் வான் எல்லையில் இன்று முதல் அடுத்த 6 மாதங்களுக்குப் பறக்க ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com