கடந்த அக்டோபர் முதல் இவ்வாண்டின் மார்ச் வரை பிரேசில் சான்டா கேட்டரினா மாநிலத்தின் ஃப்ளோரியானோ போலிஸ் நகரிலுள்ள கழிவுநீர் குழாயின் நீர் மாதிரியின் மீது ஆய்வு மேற்கொண்டதில், கடந்த நவம்பர் திங்கள் நீர் மாதிரியில் புதிய கரோனா வைரஸ் இருந்தது கண்டறியப்பட்டுள்ளதாக பிரேசிலின் சான்டா கேட்டரினா ஃபெடரல் பல்கலைக்கழகத்தின் நிபுணர்க் குழு 2ஆம் நாள் அறிவித்தது.
இந்தக் கண்டுபிடிப்பானது, அமெரிக்கக் கண்டத்தில் முதலாவது கரோனா நோயாளி உறுதி செய்யப்பட்ட இவ்வாண்டின் ஜனவரி 21 ஆம் தேதியை விட 2 மாதங்கள் முன்னதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: சீன ஊடகக் குழுமம்