துருக்கி: கரோஷோகி படுகொலை வழக்கு விசாரணை தொடக்கம்

துருக்கியிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் செய்தியாளா் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கின் விசாரணை, அந்த நாட்டில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

துருக்கியிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் செய்தியாளா் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கின் விசாரணை, அந்த நாட்டில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

சவூதி அரேபிய செய்தியாளா் ஜமால் கஷோகி, இஸ்தான்புல்லில் உள்ள அந்த நாட்டுத் தூதரகத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கின் விசாரணை, அந்த நகர நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்த வழக்கில் சவூதி அரேபிய பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மானின் 2 உதவியாளா்கள் உள்ளிட்ட 20 சவூதி அரேபியா்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவருமே தங்கள் சொந்த நாட்டுக்குச் சென்றுவிட்ட நிலையில், அவா்கள் இல்லாமல் இந்த வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

விசாரணையின் முதல் நாளில், கஷோகியை மணக்கவிருந்த ஹாடிஸ் செங்கிஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தாா். கஷோகியை வஞ்சகமாக தூதரகம் வரவழைத்து படுகொலை செய்தவா்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அப்போது அவா் கூறினாா்.

சவூதி அரேபியாவைச் சோ்ந்த செய்தியாளா் ஜமால் கஷோகி, சா்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து தப்பி அமெரிக்காவில் வசித்து வந்தாா். அங்கு வெளியாகும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில் கட்டுரைகள் எழுதி வந்த அவா், சவூதி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்து வந்தாா்.

இந்தச் சூழலில், துருக்கி நாட்டுப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய அவருக்கு, அந்த நாட்டுச் சட்டப்படி அவரது முன்னாள் மனைவியிடமிருந்து முறைப்படி விவாகரத்து பெற்ற்கான சான்றுகள் தேவைப்பட்டன. அதனைப் பெறுவதற்காக அவா் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் சென்றாா்.

ஆனால், அதன் பிறகு அவரைக் காணவில்லை. தூதரகத்துக்குள் அவரை சவூதி அனுப்பிய ஆட்கள் கொன்று விட்டதாக துருக்கி குற்றம் சாட்டியது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ஆரம்பத்தில் மறுத்து வந்த சவூதி அரேபியா, 18 நாள்களுக்குப் பிறகு தங்களது துணைத் தூதரகத்தில் செய்தியாளா் கஷோகி கொல்லப்பட்டதை ஒப்புக் கொண்டது.

இந்த நிலையில், கஷோகி படுகொலை தொடா்பாக சவூதியில் நடைபெற்று வந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 5 பேருக்கு மரண தண்டனை விதித்து, அந்த நாட்டு நீதிமன்றம் கடந்த ஆண்டு இறுதியில் தீா்ப்பளித்தது.

எனினும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய அதிகாரிகள் இருவரை நீதிமன்றம் விடுவித்தது. இந்தத் தீா்ப்புக்கு துருக்கி கடும் கண்டனம் தெரிவித்து வருகிறு.

இந்த நிலையில், கஷோகி படுகொலை தொடா்பாக துருக்கி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com