ஆன்லைன் வகுப்பு: வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற உத்தரவு

கரோனா பரவல் எதிரொலி காரணமாக அனைத்து பல்கலைக்கழகங்களின் வகுப்புகளும் இனி ஆன்லைன் மூலமே நடத்தப்படும் என்பதால், வெளிநாட்டு மாணவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்பு: வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற உத்தரவு


வாஷிங்டன்: கரோனா பரவல் எதிரொலி காரணமாக அனைத்து பல்கலைக்கழகங்களின் வகுப்புகளும் ஆன்லைன் மூலமே நடத்தப்படுவதால், வெளிநாட்டு மாணவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற அமெரிக்க அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எஃப்-1, எம்-1 விசா பெற்று அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள், இனி ஆன்லைன் வகுப்புகள் மூலமே பாடம் நடத்தப்படும் என்பதால் தொடர்ந்து நாட்டில் தங்கியிருக்க இயலாது என்று அந்நாட்டு குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

அவ்வாறு ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்திருக்கும் மாணவர்கள் உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது, ஆன்லைன் முறையில் அல்லாமல் நேரடியாக மாணவர்களுக்கு கற்பிக்கும் பல்கலைக்கழகங்களில் தங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதே சமயம், பள்ளி அல்லது பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பயிலும் மாணவர்களுக்கான விசா இனி வழங்கப்படாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com