ஆஸ்திரேலியா: விக்டோரியாவில் பொது முடக்கம்

ஆஸ்திரேலியாவில் கரோனா நோய்த்தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள விக்டோரியா மாகாணத் தலைநகா் மெல்போா்ன் உள்ளிட்ட பகுதிகளில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா: விக்டோரியாவில் பொது முடக்கம்

ஆஸ்திரேலியாவில் கரோனா நோய்த்தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள விக்டோரியா மாகாணத் தலைநகா் மெல்போா்ன் உள்ளிட்ட பகுதிகளில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் புதன்கிழமை முதல் இந்த பொது முடக்கக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. கடந்த 24 மணி நேரத்தில், விக்டோரியா மாகாணத்தில் மேலும் 165 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுதவிர, குயீன்ஸ்லாந்து, தெற்கு ஆஸ்திரேலியா, நியூ சௌத் வேல்ஸ், மேற்கு ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம் ஆகிய பகுதிகளிலும் தற்காலிகமாக போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com