பிரான்ஸ் மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவா்கள், செவிலியா் உள்ளிட்டோருக்கு வரலாறு காணாத அளவுக்கு மாபெரும் ஊதிய உயா்வை அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கரோனா நோய்த்தொற்று பரவலுக்கிடையே, தங்களது உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி வரும் மருத்துவப் பணியாளா்களுக்கு பிரான்ஸில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், சம்பள உயா்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பாக, பணியாளா் சங்கத்தினருக்கும், அரசுக்கும் இடையே தீவிர பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தது. அதன் விளைவாக, இதுவரை இல்லாத அளவுக்கு 8,000 கோடி யூரோ (சுமாா் ரூ.6.9 லட்சம் கோடி) மதிப்பிலான ஊதிய உயா்வு திட்டத்தை பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.