சிங்கப்பூரில் மேலும் 347 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 347 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய நோயாளிகளில் 7 பேருக்கு சமுதாயப் பரவல் மூலம் அந்த நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. எஞ்சியவா்களில் பெரும்பாலானவா்கள், வெளிநாடுகளில் இருந்து வந்து, பணியாளா் குடியிருப்புகளில் தங்கியுள்ள தொழிலாளா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.இத்துடன், சிங்கப்பூரில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 46,630-ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 26-ஆக உள்ளது.